3. மறைந்திருக்கும் உண்மைகள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பூமியில் நாம் பார்க்கும் அனைத்திலும்
திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று குறிப்பிடுவது பரம்பொருளான படைத்தலுக்கு ஆதாரமாய் இருக்கும் இறைவனைக் குறிப்பிடுகிறார்.நாம் பல சமயங்களில் இதை தவறாகவே
இந்த உலகை நாம் உருவாக்கிய மனம் கொண்டு பார்க்கும் பொழுது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை அறிய முடிவதில்லை.இதுவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நாம் உணராது இருப்பதன் காரணமாகும்.
நாம்
வயதான மூதாட்டி ஒருவர் கையில் ஊசியை வைத்துக்கொண்டிருப்பதை உணராது வீடு முழுக்க தேடிக்கொண்டிருந்தாராம்.
அறியாமையே உண்மைகள் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது. அறியாமை வளர காரணமாய் இருப்பவற்றைக் கண்டறிந்து அந்தத் திரைகளை நீக்க வேண்டும்.
மனிதர்கள்கினற்றுத் தவளைப் போல் மதம் என்ற எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .ஆன்மீகப் பெருங்கடலில் நீந்த மதப்பற்றைத் துறந்து அறியாமையால் கட்டமைத்த எல்லைகளைத் தகர்த்து வெளியே வர வேண்டும்.இங்குமதத்தை துறக்க வேண்டும் என்று கூறுவதுமனதில் இருந்து துறக்க வேண்டுமே தவிர வெளியில் துறக்கப்படவேண்டியதைப்பற்றி கூறவில்லை.
மனதிலிருந்து மதத்தை நீக்குவதற்கு வெளியில் நாம் எந்த செயல்முறையான இறை வழிபாட்டையோ, கடைப்பிடிக்கும்
இறைவனை உணர்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட மதம் மனிதர்களின் மத பற்றால் இறைவனை உணர்வதற்கு தடையாக மாறிவிட்டது. பூமியில் பல தேசங்களில் பல விதமான மதங்களை மனிதர்கள் பின்பற்றி வருகின்றனர்.பூமியில் பிறக்கும் மனிதர்கள் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை உணர்ந்த மகான்களும்,யோகிகளும் ஞானிகளும் தங்களின் ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கொள்கைகளையும் , தத்துவங்களையும், வாழ்வியல் முறைகளையும் வடிவமைத்தனர் . மனிதனுக்கு எளிமையான செயல்முறையை வழங்குவதற்காகப் பல வழிமுறைகள் அளிக்கப்பட்டன, அது ஒவ்வொரு கொள்கைகளும் தத்துவங்களில் வெளியில் சில வேறுபாடுகள் இருந்தாலும் அணைத்து மதத்தின் சாரமும் ஒன்றே என்பதனை உணராது போனதால் அது வெளியில் பல
இறைவன் இல்லை என்று கூறும் மதங்கள் கூட
எல்லா மதமும் ஒரே கடவுள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றது அதை மனிதன் உணர்வதற்கு வழிக்காட்டவே ஏற்படுத்தப்பட்டது.ஆனால் அதன் தத்துவங்களின் உண்மை தன்மை அறியாது போனதால் பூமியில் பல பிரிவினைகளும் மதக்கலவரங்களும் நடந்தேறுகின்றன.மனிதன் விழித்தால் மட்டுமே இந்த சூழ்நிலை மாறும்.எல்லா மதமும் ஆத்மா ஞானம் வழங்குவதற்காகவே ஏற்பட்டது என்பதனை உணர வேண்டும் .
கல்லூரியில் சேர்ந்து
இந்து மதம் , முகலாய மதம்,கிருத்துவ மதம்,புத்த மதம் ,சமண மதம்,சீக்கிய மதம் என்று மேலும் பல மதங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது .இதன் பாடத்திட்டங்கள் மாறுபட்டாலும் அதன் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கின்றது.
பல வகையான கல்வி முறைகள் இருந்தாலும் ஒரு கல்வி முறை அனைவராலும்
இந்த மதத்தில் பரமாத்மாவின் பல அவதாரங்கள் நடந்தேறியது .இந்த மதத்தின் பல மகான்களும் ,ஞானிகளும் ,யோகிகளும் , சித்த புருஷர்களும் உருவாகினர்.இங்குத தத்துவங்கள் படைப்பின் தன்மையை மிக எளிமையாக மனிதர்களுக்கு விளக்குகிறது. ஆன்மீகத்தின் நோக்கம் விடுதலை என்பதை உணர்த்தும் விதத்தில் எல்லா கொள்கைகளும் தத்துவங்களும் வாழ்வியல் முறைகளும் உள்ளன.வாழ்வியல் முறையிலேயே மனிதன் விடுதலை அடைய வழிகாட்டும் விதமாய் சாத்திர சம்பிரதாயங்கள் உள்ளன .இங்குப் பல ஞான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
வேறு மத
இந்த மதத்திலும் பல பிரிவுகள் உள்ளன.இந்த பிரிவினைகளும் மனிதனின் அறியாமையயால் வளர்ந்திருக்கிறது.தெய்வத்தை பற்றிய தவறான புரிதலால் இது வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.அணைத்து பிரிவினரும் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கூறிக்கொண்டிருக்குகின்றனர்.
தங்கம் என்ற உலோகத்தைக்கொண்டு வளையல் ,காதணி, மோதிரம், குடம்,குவளை ,சிலை ,தேர் என்று பல வடிவங்களில் ஆபரணங்கள் வருகிறதோ அது போலவே அணைத்து மகான்களும் ஞானிகளும் ஒரே பரம்பொருளைப் பலவிதமாய் வர்ணிக்கின்றனர்.தத்துவங்கள் பல வடிவங்களில் வெவ்வேறாய் இருப்பதன் உண்மைத் தன்மை அறியாமல் வேற்றுமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
மோட்சம் ,முக்தி ,வீடுபேறு என்ற விடுதலை ஒன்றை மட்டுமே
கடவுளை உணர்வதற்கு நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மனதால்
எல்லையில்லா எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்த்தும் விதமாய் எல்லா உயிரினங்களும் இங்கு வழிப் படப்படுகின்றன .மரம், பூ மலை ,கடல், நதி, பறவை,விலங்கு,கருவிகள் என்று அனைத்தும் கடவுளாய் வழிப்படப்டுகின்றன.பூமியில் தோன்றும் அனைத்திலும் இறைவன் இருப்பை உணர்த்தவே இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன .
இறைவன் ஒருவனே என்பது மட்டுமே எல்லா வேத நூல்களும் புராணங்களும் இதிகாசங்களும்,எல்லா ஞான நூல்களும்,இலக்கிய நூல்களும்,,யோக நூல்களும் உரைக்கின்றது. அப்படியிருக்க ஏன் நாம் இங்குப் பல தெய்வங்களை வழிபட்டு வருகின்றோம்?
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஏன் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன?
இறைவன் ஒருவனே என்றால் ஏன் இறைவன் பல நாமங்களால் அழைக்கப் பெறுகிறான்?
இப்படிக் கேள்விகள் எழும்போது மனிதனால் உண்மைத் தன்மையை உணர முடியும்.இங்கு அதிகமான ஞானிகள் உருவானதற்குக் காரணமே கேள்வி கேட்கும் சுதந்திரம் முழுமையாய்க் கொடுக்கப்பட்டது.இத்தகைய கேள்விகள் வாயிலாக பல கீதைகளும் ,பல ஞான நூல்களும் உருவாகியது.
இந்த கேள்வி முறை ஆங்கிலேய அடிமையால் முற்றிலும்
சில மனிதர்கள் இது தான் சரி இதில் கேள்வியே எழ அவசியமேயில்லை என்று அதீத பற்றால் அப்படியே
நாம் ஏதோ ஒன்றை நாம் தெரிந்து வைத்திருப்பதாக இருக்கும் வரை, நம்பிக் கொண்டிருக்கும் வரை அதன் உண்மையை உணர முடியாது.
நாம் ஒன்றும் தெரியாததை அறிந்து கொள்ள முயலும்போது மட்டுமே நம்மால் உண்மையை அறிய முடியும். கடவுளைப் பற்றி ஏதோ தெரிந்ததை வைத்து அந்த
விடையை தேடுவதினால் உண்மையை அறிய முடிவதில்லை.
ஆனால் சில மனிதர்கள் கேள்வியின் விடையை
இத்தகைய மனிதர்களே ஞானிகளாக உருவாகிறார்கள்.
நாம் இதுவரை புரிந்து சேகரித்து வைத்திருக்கும் அறிவை விடுத்து நம் உள்ளே தேடத் தொடங்கினால் நிச்சயம் நம் உள்ளே இருக்கும் படைத்தவன் உண்மையை உணர்த்துவார்.
சரி,இந்த கேள்விக்கான விடைகளைத் தேடி செல்வோம்.
நிலையற்ற பொருள்களான மண் ,கல் இதனைக் கொண்டு தான் ஆலயம் கட்டமைக்கப்படுகின்றது.அந்த ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வத்தின் சக்தியாலே அந்த நிலையற்றப் பொருளால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்தி
அது போல் நிலையற்ற இந்த உடலின் உள்ளே இயங்கும் இறை சக்தியால் இந்த உடல் சக்தி இயங்குகிறது என்பதனை உணர்த்தும் விதத்திலே இத்தகைய ஆலய அமைப்பின் மூலம் நாம் உணரலாம்.
திருமூலரும் அவரது பாடலில் ஊனுடம்பு ஆலயம் என்று உடலை ஆலயத்தோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
இங்கு ஏதோ ஒரு உவமைக்காக ஆலயத்தை மனித உடலோடு ஒப்பிடவில்லை. இறை தத்துவத்தின் அடிப்படையிலேயே அப்படி பாடியிருக்கிறார். பூமியை இறைவன் ஐம்பூதங்களால் படைத்தார்.அதே போல் நம் உடல் மூலப்பொருளால் இருப்பவை ஐம்பூதங்கள் ஆகும்.ஆலயங்கள் கட்டுமானத்தில் பல ஆகம
கல்லில் பல தெய்வ
எல்லையில்லாமல் நிறைந்திருக்கும் ஒரே தெய்வம் பல்வேறு அவதாரம் எடுத்து
கடவுளை உணர்ந்த மகான்களும் , ஞானிகளும் தங்கள் தவ சக்தியால் ஆலயங்களுக்கும் சிலைகளுக்கும்
மகான்கள் இத்தகைய விஞ்ஞான முறையில் ஆலயங்களையும் தெய்வங்களையும் எழுப்பிச் சக்தி மையத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் இயங்கும் தெய்வ சக்தியை உணர்ந்து தெய்வ நிலையை அடையவே இத்தகைய விஞ்ஞான செயல்முறைகளை உருவாக்கினர். பூமியில் ஜீவிக்கும் மனிதருக்கு மறைமுகமாக ஆத்ம ஞானத்தைக் கற்பிக்கவே இவற்றை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று தவறாகப் பயன்படுத்தபடுகின்றது.. மனிதன் உள்நிலையில் இருக்கும் தெய்வத்தினை உணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதைபுற சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக ஆசை, சுகங்களைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்.. மனிதனின் அகங்காரம் அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை அறியாமையால் அகங்காரத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது .
தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இன்று ஆலயங்களில் பூஜைகள் நடைபெறும் நிலையை ஏற்படுத்திவிட்டது. மகான்கள் கடுமையான தவ வலிமையால் மனிதர்கள் கர்மத்தினை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவற்றை இன்று கர்ம மூட்டைகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்துவது மனித சமுதாயம் மேலும் கடுமையான சூழ்நிலைய சந்திக்க நேரிடும்.
நாம் அந்த இடங்களுக்குச் சென்று உடல்,மனம்,உணர்ச்சிகளின் மேல் இருக்கும் கவனத்தை விட்டு உள்நிலையில் மௌனமாக அமர்ந்திருக்கும் போது அங்கிருக்கும் சக்தி மையத்தால் நமக்குள் இருக்கும் இறை சக்தி இணையும்போது நமக்குள் ஏற்படும் அதிர்வலையை உணரும் போது நமக்குள் இயங்கும் தெய்வ சக்தியை நம்மால் உணர முடியும். நம்மால் உடலையும் மனதையும் கடந்து செல்ல நம்மால் எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். நாம் ஏதோ பெரிய பெரிய யோகா கலையை எல்லாம் கற்க வேண்டிய அவசியமே இல்லை. எண்ணங்கள் இல்லாத மௌன நிலையில் இருந்தால் போதும் நம்மால் எளிமையாக இயங்கும் சக்தியை உணர முடியும்.
நாம் சக்தி மிகுந்த எந்த புண்ணிய ஸ்தலங்களிலும் செல்லும் போது அந்த இடத்தின் பதிவுகள் நம் உடலில் கிரகிக்கப்படுகிறது ஆனால் நாம் வெளி சூழ்நிலையில் நம் கவனம் இருப்பதால் அதை உணர முடியவில்லை.
இந்த சக்தி பரிமாற்றத்தினை நம் ஐம்புலன்களால் அனுபவம் செய்ய இயலாது,நம் காரண அறிவாலும் புரிந்துக் கொள்ள இயலாது, இது நம் மௌன நிலையில் அனுபவம் மட்டுமே செய்ய முடியும்.
பூஜை என்பது ஏதோ வெளியில் செய்யும்
சிவவாக்கியர் என்ற சித்தர் எழுதிய பாடலில் பூஜை என்பதற்கு மிக
ஆலயங்களில்
ஆலயங்களில் மட்டும் இல்லை மகான்களின்
விடுதலை அடைய முடியாது. சக்கரம்சுழல்வதுப் போல் நாம் புறத்தில்சுழன்றுக் கொண்டு இருக்கின்றோம்.அங்கு இருக்கும் மையப்பகுதியானது சக்கரம் சுழன்றாலும் சுழலாது. அதுப் போலவே தெய்வத்தின் இருப்பிடமான மையப்பகுதியில் நாம் சென்றால் கால சக்கரத்திலிருந்து விடுதலை அடைய முடியும்.இயற்கையாகவே இருக்கும் ஈர்ப்பு விசையால் மையப் பகுதியிலிருந்து நம்மை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் உள்செல்லமால் வெளியில் சுழலும்ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாறிக்கொண்டுஇருக்கிறோம்.நாம் எப்போது புற சூழ்நிலையில் வரும் கடினமான சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு மையத்தை நோக்கி நகர்ந்து மையப் பகுதியைச் சென்றடைந்தால் மட்டுமே நம்மால் விடுதலை அடைய முடியும்.புற சூழ்நிலை
உணர்தல் என்பது புறத்தில் வழிப்படுவதால் அடைய முடியாது.நாம் அகத்தில் இருக்கும் இறைவனை உணர முன்வந்தால் மட்டுமே வெளியில் இருக்கும் கருவிகள் கூட வேலை செய்யும்.
கடவுள்
நாம் வெளியில் எவ்வளவு தேடி அலைந்தாலும் எத்தனை பூழை செய்தாலும் உள் முகமாக நாம் திரும்பாமல் நம்மால் கடவுளை உணர முடியாது.அவர்கள் பாடலில்
கடவுள் என்ற வார்த்தையிலே அதன் பொருளை நாம் அறிய முடியும்.உள்ளே கடந்து செல்வது
திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறள் 3-ல் அன்பால் நினைப்பவர் இதய
அடுத்ததாக
"ஸ்வர: ஸர்வ-பூதாநாம்
அவ்வையார் மோட்சத்திற்கு தனக்கு வழிகாட்டிய விநாயக பெருமாளைத்
அல்லல் களைந்தே
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
நாம் படித்த
இங்கு கடவுளுக்கு பல நாமங்கள் உள்ளன .அந்த நாமங்கள் கூட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.,இது அறியாமல் மனிதர்கள் கடவுளைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே கடவுள்வெவேறு குண தண்மையில் வெளிப்படும் போது பல நாமங்கள் அழைக்கப்படுகின்றார். பல்வேறு தொழில்களில் ஈடுபடும்போது பல அடையாளங்கள்பெறுவது ப் போலவே செயலுக்கு ஏற்றார் போல் பல நாமங்கள் உடையவராக இருக்கிறார்.
சித்த புருஷர்கள் , யோகிகள் , ரிஷிகள் ,ஞானிகள் என்று மாறுபட்டு அழைக்கப்படுவதன் காரணம் அகத்தில் இறைவனை உணர்ந்து அவர்கள் வெளிப்படுத்திய
இறைவனின் திருஉருவ வடிவமைப்பின் ஏராளமான தத்துவங்கள் அமைந்திருக்கின்றன.அது மட்டுமின்றி தெய்வத்தின்
உதாரணமாக , ஞான சக்தியாய் தோன்றிய சரஸ்வதி தே வியின் வாகனமாக அன்னப்பறவை அமைந்திருக்கிறது. வேறு எதற்கும் இல்லாத ஒரு சிறப்பான இயல்பு அன்னப் பறவைக்கு இருக்கின்றது. அன்னப் பறவையால் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் திறன்
அது போலவே மனிதனுள் ஞானமும் அஞ்ஞானமும் கலந்திருக்கிறது.
சில அஞ்ஞானங்கள் ஞானத்தின் வடிவில் இருந்துகொண்டு அதை நாம் அன்னைப் பறவை பாலையும் தண்ணீரையும் பிரிப்பதைப் போல் நாம் பிரித்தால் மட்டுமே உண்மையான ஞானத்தை அடைய முடியும் என்பதை உணர்த்தும் விதமாகச் சரஸ்வதி தேவிக்கு அன்னப் பறவை வாகனமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை கலையை,இசையைக் குறிப்பதாகவே நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.ஆனால் சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை மனித உடலில் இருக்கும் முதுகுத் தண்டினைக் குறிக்கிறது மனிதனின் முதுகுத் தண்டை போல் நுட்பமாக வீணை கருவி அமைந்திருப்பதை யோக நூல்களிலும் வேத நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ளது .முதுகுத் தண்டின் அடியில் இருக்கும் மனிதனின் உயிர் சக்தி தலையின் மேல் வரை எழச் செய்வதே யோக சாதனையாகும். உள்நிலையில் பூமியில் இருக்கும் உயிர் சக்தியை ஆகாயத்தைக் கடந்து எல்லையில்லாத மோட்ச நிலை அடைய முடியும்.உயிர் சக்தியை வேத ஸ்ருதியால் வீணை மீட்டுவதையே சரஸ்வதி தேவியின் வடிவம் உணர்த்துகிறது.
சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் புத்தகம் வேத
சரஸ்வதி தேவிக்காக கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியில் ஒன்பதாவது நாள் சரஸ்வதி தேவிக்கு ஆயுத பூஜை என்று அனைத்து கருவிகளையும் சரஸ்வதியிடம் சமர்ப்பிக்கிறோம்.இதில் மிகப் பெரிய சரணாகத தத்துவம் மறைந்துள்ளதை நாம் அறிவதில்லை. ஞான சக்தியின் அருளால் பெற்ற ஞானத்தையும் ,
அடுத்ததாக எல்லா தெய்வமும் மகான்களும் தாமரை மலர்
எல்லா தெய்வமும் ஏதோ ஒரு வகையான முத்திரையில் இருப்பது கூட தன பக்தன் எந்த முத்திரை செய்ய வேண்டும் என்று வழிக்காட்டுகின்றனர்.
மனிதன் உள்நிலையில் இறைவனை எப்படி அடைய வேண்டும் என்பதனை விளக்கும் பொருட்டு அந்த தெய்வம் அமைக்கப்பட்டிருக்கின்றது. எல்லையற்ற பரப்ரம்மத்தை எப்படி சென்றடையும் வழிக்காட்டவே உருவ அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
புராணக் கதைகளில் தேவர்கள் அசுரர்கள் என்று இருவேறாகக் கூறப்பட்டிருக்கும்.இது மனிதனுக்குள் இருக்கும் தேவ குணம் அசுரர் குணம்இப்படிக் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு தெய்வமும் ஏதோ ஒரு அசுரனை வதம் செய்வதுப் போலவே கதைகள் அமைந்திருக்கும். இது அவர்கள் மனித உருவமாய் அவதரித்த போது எவ்வாறு ஆசைகள், துவேஷங்கள், காமம்,குரோதம்,அகங்காரம் அனைத்தையும் அழித்து ஞானமடைந்துபரபிரம்மத்தை அடைந்ததை வெளிப்படுத்தும் விதமாகவும் நாம் எப்படி அடைய வேண்டும் என்பதற்கு வழிக்கட்டவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
கடவுள் முருகன்
இவை முருகனை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி தாங்கள் தங்களுக்குள் இருக்கும்
எல்லா கடவுளுக்கும்
பெண்ணாய் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பக்தி யோகமும் ஞான யோகத்தின் மூலம் எவ்வாறு
“ மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாளாம் நீராட போதுவீர் “
பாடல்கள் தொடங்கும் போதே ஞானம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் ஞானத்தில் நீராடலாம் என்றே
இதே போல் பல சித்தர்களின் பாடல்களும் பக்திமான்கள் இயற்றிய
ஒவ்வொரு மனித ஜீவனுள் உடல் ,மனம் ,
திருமணம் என்னும் சொல் ஆண் சக்தியும் பெண் சக்தியும் இணைதலைக் குறிக்கிறது .உடலையும் ,மனதையும்
இணைப்பதைச் சொல்லவில்லை.இரு மனங்களை இணைக்கவே முடியாது என்பதே உண்மை.திருமண நிகழ்ச்சியில் சொல்லப்படும் மந்திரங்களும் வாழ்த்துப் பாடல்களிலும் இதுவே இடம்பெற்றிருக்கிறது.எல்லையற்று இருக்கும்பிரபஞ்சத்தைப் படைக்க ஒரு பெண் சக்தியுடன் இணைந்து படைத்தலை நிகழ்த்திநான் படைத்தவன்,.சிவமாக இருந்த பிரம்மம் சக்தியோடு இணைந்து படைப்பை நிகழ்த்தியதுவே அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் ஆகும் .
மனிதப பிறவி எடுத்தவன் உள்நிலையில் இந்த அனுபவத்தை அடைந்தே ஆக வேண்டும். புற வாழ்க்கையில் மனிதன் வேறு பாலின சக்தியோடு இணைந்தாலும் இணையாவிட்டாலும் அகத்தில் இது நடைபெற்றே ஆக வேண்டும் என்பதே மனிதப் பிறப்பில் மனிதன் அடைய வேண்டிய சாதனையாகும்.மனிதன் அகத்தில் இது நிகழ்ந்தால் மட்டுமே முழுமை பெற்று புற வாழ்வினை அனுபவிக்க இயலும் .மனிதர்கள் புறவாழ்க்கையில் திருமணம் நடந்தாலும் முழுமை உணர்வை அடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
எல்லா உருவ தெய்வமும் அந்த எல்லையற்ற பரப்ரம்மத்திடம் இருந்து தான் தோன்றியது.ஆகவே எல்லா தெய்வத்திற்கும்இறைவனாக இருப்பது அந்த எல்லையற்று இருக்கும் பரம்பொருள் ஆகும்.இந்த எல்லையற்று இருக்கும் பரம்பொருளை எந்த எல்லைக்குள்ளும் கொண்டு வரவே முடியாது.எல்லா மத கடவுளுக்கும் மூல கடவுளாய் இருப்பது அந்த பரம்பொருளாகும்.
நாம் உருவமுள்ள கடவுள் என நினைத்து
நாம் எப்படி குழந்தைகளுக்கு ஒரு கருத்தைச சொல்வதற்கு கதைகளை வடிவமைத்து அதன் சாரத்தை உள்புகுத்துகிறோமோ அது போலவே இங்கு நமக்குள் தெய்வத்தை எப்படி உணர வேண்டும் என்பதற்காக அதன் உண்மைக் கதை இங்கு நமக்கு வழிகாட்டப்படுகிறது.
கதைகள் ஏதோ நடக்காததைக் கற்பனையாக உருவாக்கவில்லை .இந்தக் கதைகள் தெய்வத்தை உணர்ந்த ரிஷிகளும் ,குருமார்களும் தங்கள் ஞான திருஷ்டியால் முற்காலங்களில் அவதரித்து தெய்வ நிலையை அடைந்தவர்களை வைத்து இந்தக் கதைகள் படைக்கப்பட்டுள்ளன .பல ஆண்டுகள் யோக நிலையில் இருந்து அனாதியாக இருந்த வேதத்தில் புராணங்களைப் படைத்தார்கள். வேதம் வெளியில் தோன்றியதல்ல அது ரிஷிகள் உள்முகமாக தவத்தால் பிறந்தது,மதம் என்பதற்குள் கொண்டு வராமல் எல்லா மனிதனின் ஆத்ம ஞானத்திற்கான கருவி.எல்லா மனிதர்தலும் தனக்குள் இருக்கும் பேராற்றலோடு தொடர்பு கொண்டால் இநத அமுதத்தை சுவைக்க முடியும்.
இறைவனை உணர மட்டும் தான் முடியுமே தவிர புரிந்து கொள்ள முடியாது ஆனால் மாய இருள் விலக ஞானிகளின் ஞான ஒளி அவசியமாகிறது.அந்த ஞான ஒளியை ஏராளமான ஞானிகள் ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.நாம் விழிப்புணர்வடைய அவர்களின் ஒளியில் இனைய வேண்டும் .
ஓர் ஆசிரியர் மாணவனுக்கு ஒரு பொருளின் செயல்பாட்டிற்கு எப்படி ஒரு ஆய்வுக் கூடத்தில் பல விதமான கருவிகளும்,வரைபடங்களும், வடிவமைப்புகளை உருவாக்கி அந்தந்த மாணவர்களின் திறனிற்கேற்ப ஒரே கருத்தை வெவ்வேறு விதமாக விளக்குவாரோ அது போலவே இங்கு நமது ரிஷிகளும் ,ஞானிகளும் பல்வேறு பாடங்களை விளக்கிக் கொண்டுள்ளனர். ,உவமை உவமேயங்களை வைத்து விளக்க முயல்வது போல் தான் இங்கு தெய்வத்தை உணர்த்துவதற்காக குருமார்கள் உருவாக்கி இருக்கிறார்கள் .உவமை உவமேயங்கள் ஏதோ காரணமில்லாமல் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இங்கு எந்த உண்மையையும் மறைத்து வைக்கவே இல்லை .நாம் உடல் ,மனம் என்ற எல்லைக்குள் இருப்பதால் மட்டும் அனைத்தும் மறைந்ததாக இருக்கிறது. நாம் அதைக் கடந்துவிட்டால் எல்லா உண்மையும் புலப்படும்.நாம் புற வாழ்க்கைக்காக என்று சிந்தித்துக்கொண்டிருப்பதால் தான் உடல் நலனிற்கும்,மன நலனிற்கும் ஏற்படுத்தப்பட்டதாய் மட்டும் தெரிகிறது. மனிதப் பிறவியின் நோக்கம் உணர்ந்தாள் நம்மால் சரியாக பார்க்க முடியும்.
இந்த அமைப்பு ஆலயங்கள் நமக்கு ஆத்ம ஞானமடைய கல்வி நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆலய கோபுரங்களிலும் ,தூண்களிலும் ஏராளமான சிற்பங்கள் உருவாக்கி அதன் மூலம் நமக்கு மறைமுகமாக ஆத்ம ஞானத்தை அருளும் வித்தியாலயங்களே ஆலயங்கள் . பக்தி யோகர்களுக்கு மட்டும் ஆலயங்கள் உருவாக்கப்படவில்லை.கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கீரியா யோகம் அனைத்தும் ஒரே இடத்தில் பயில சிறந்த கருவியாக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆய கலைகளும் பக்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்ற்க்காக ஆலயங்கலில் ஏற்படுத்தப்பட்டன.
தங்கள் தவ வலிமை மூல வருங்கால மனித சமுதாயம் தெய்வ நிலை அடைய விலை மதிப்பற்ற மனித சமுதாயத்திற்கு அளித்துள்ளனர்.ஆனால் நாமோ நமக்கு அளித்த கருவிகளை தவறாகப் பயன்படுத்துகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு மரவெட்டியாளன் தன்னிடம் இருப்பது தங்க கோடாரி என்று அறியாமல் அதைக் கொண்டு மரம் வெட்டிக் கொண்டிருந்தானாம். அது போல் தான் நாமும் செய்து கொண்டிருக்கின்றோம்.
யாரோ ஒருவர் நம் மத வழிபாட்டுத் தளங்களை சிதைக்கும்போது கொதித்தெழுந்து அவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமும் அறியாமையால் மறைமுகமாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.அவை உருவாக்கப்பட்டதன் நோக்கத்திற்காக எதிர்ப்பதமாய் செய்துகொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்து விழித்தெழ வேண்டும்
மத பற்றால் உறக்கத்தில் இருக்கும் அனைவரும் விழிப்பு நிலை வர முன் வர வேண்டும்.இதுவே அவரவர் தர்மமாகும்.நமக்குள் உருவமற்று இருக்கும் இறைவனை உணர உருவ வழிபாட்டின் தத்துவம் அறிந்து கொண்டு செல்லும்போது இந்த பூமியே தேவலோகமாகும் .
அகத்தில் இருக்கும் இறைவனை உணர நாம் இறைவனைப்பு புரிந்துகொள்ளவோ,கற்கவோ தேவையே இல்லை .ஆனால் இங்கு நாம் அரைகுறையாகப் புரிந்து வைத்திருக்கிறோம். இதை சரிப்படுத்த நாம் இவற்றை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
மனிதன் தனக்குள் போட்டு வைத்திருக்கும் மத எல்லையை கடந்தால் எல்லையற்ற இறைவனை அடைய முடியும்.இங்கு மனிதன் வெளியில் மத செயல்முறைகளை துறப்பதை பற்றி சிந்திக்கத் தேவையே இல்லை .நாம் உள்ளநிலையில் நமக்குள் இருக்கும் இறைவனிடம் சரணடைந்து வெளியில் நாம் செய்ய வேண்டியதை அந்த பேராற்றலிடம் ஒப்படைத்தால் போதும்.உள்நிலையில் நாம் எந்த மதத்தின் செயல்முறைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் . அவருக்கு எந்த ஆசிரியரின் கல்வி முறையில் பின்பற்ற முடிகிறதோ அந்த கல்வி முறையில் முன்னேறி செல்லலாம்.
நாம் கருவியை தவறாக பிரயோகப்படுத்துவதை தான் மாற்ற வேண்டுமே தவிர அந்த கருவியை துறப்பதாலோ எதிர்ப்பதாலோ ஒரு பயனும் இல்லை.இனி புற சுகத்திற்க்காக அங்கு செல்வத்தை நிறுத்தி ஆத்ம ஞானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
அத்தகைய கருவி இல்லாமலே கூட மனிதனால் விழிப்புணர்வை அடைய முடியும் ஆனால் எல்லா மனிதருக்கும் அது சாத்தியமில்லை .பல மனிதர்களுக்கு மாயையிலிருந்து வெளியேறும் உதவிகள் தேவைப்படுகின்றன.
இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் .எல்லா மதத்திலும் அவர்கன் தங்களுக்குள் ஏற்பட்ட தெய்வ நிலை அடைந்ததற்கு ஏற்ப அவர்களுக்காண ஆத்ம ஞானத்தினை வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் . எல்லா மத ஆலயங்களும் ஆத்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இங்கு எது சிறந்தது எது சரி என்று ஆராய்ச்சிக்கோ விவாதத்திற்கோ எந்த விஷயமும் இல்லை .நாம் உண்மை உணர்வதற்கு நமக்கு புரியும் பாட திட்டத்தையும் ஆசிரியரும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.எல்லா உருவாக்கத்திற்கும் காரணமாய் இருப்பது ஒரே பேராற்றலாகும்.எல்லாம் ஒன்றே என்றுணர்ந்து விழிப்புணர்வடைய ஆன்மீக பாற்கடலில் நீந்த வேண்டும் .
சமுத்திரம் இருப்பதை அறியாதவரை மட்டுமே மீன் கிணற்றுக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும்.சமுத்திரம் இருப்பதை அறிந்தால் சமுத்திரத்தில் நீந்த அஞ்சுவாமல் அதை அனுபவம் செய்யாமல் இருந்திடாது.அதுபோல் நாமும் அந்த பாற்கடலில் நீந்தி பேரானந்தத்தை அடைய வேண்டும்.
No comments:
Post a Comment