*/ மருந்தில்லா மருத்துவம் ~ Shreevidyalayam

மருந்தில்லா மருத்துவம்








மருந்தில்லா  மருத்துவம்





இருளின் கருமையில்

நிறைந்திருக்கும்

மெய்ஞானத்தை

வாசிப்பதே

பார்வையற்றவனுக்கு

மருந்து



நிசப்தத்தில் 

நிறைந்திருக்கும்

பேரமைதியின் இசையை  

கேட்பதே

செவியிழந்தவனுக்கு

மருந்து


மௌனத்தில்

நிறைந்திருக்கும்

ஞானத்தோடு

மௌன மொழியில்

பேசுவதே

பேச்சிழந்ததவனுக்கு

மருந்து


உடலின் வலிகளை

கடந்து 

நிறைந்திருக்கும்

 பேரன்பினை

கவனித்திருப்பதே

உடல் நோய்க்கான

மருந்து


உணர்ச்சிகளுக்கிடையில்

மறைந்திருக்கும்

பேரானந்தத்தை

உணர்ந்திருப்பதே

மன நோயாளிக்கு

மருந்து


இல்லாத குறைகளையும்

இல்லாத  நோயையும்

இருப்பதாய்

காட்சிபடுத்தும்

மனதிற்கு

அசையாது

இயங்கும்

பேராற்றலின்

பலத்தினையுனர்ந்து

விழிந்தெழுவதே

மருந்து    !!! 



 






2 comments: