*/ மெய்மையின் காதல் மொழி ~ Shreevidyalayam

மெய்மையின் காதல் மொழி


 




மெய்மையின் காதல்  மொழி






தோட்டத்தில்

 பூத்துக்குலுங்கும்

பூக்களெல்லாம்

நீயும் நானும்

ஒன்றென

காதலில்

புன்னகைத்திட


வானத்தில்

மலர்ந்திருக்கும்

பௌர்ணமி நிலவும்

நீயும் நானும்

ஒன்றென

காதலில்

கண் சிமிட்டிட


கடல்

அலையலையாக

துள்ளியெழுந்து

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

அணைத்திட


சுடும் வெயிலும்

கதிரொளியாய்

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

அன்புகதிர்கள்

வீசிட


மாலை தென்றலும்

பூங்காற்றாய்

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

அரவணைத்திட


கிளியும் குயிலும்

கொஞ்சலாய்

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

இன்னிசை

பாடிட


உறவுகளும்

நட்பும்

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

ராகங்கள்

இசைத்திட


ஆலயத்தில்

வீற்றிருக்கும் தெய்வமும்

நீயும் நானும்

ஒன்றென

காதலாய்

அருள்மழை

பொழிந்திட


பிரபஞ்சமும்

எல்லா உயிர்களும்

நீயும் நானும்

ஒன்றென

மௌனமாய்

காதல் வசனங்கள்

பேசிட


மெய்மையான

காதலின்

மௌன பாஷைகள்

உணராது

அறிவு மயக்கத்தில்

மனதில்

சிறைபப்ட்டிருக்கிறான்

இல்லாத

நானென்ற

அகந்தையில்

மனிதனாக  !!!









No comments:

Post a Comment